motor bikeமோட்டார் சைக்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். எனினும் காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும் ஆ தொழுகைக்கான பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை’ என மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் தெரிவித்தார்.

காத்தான்குடி 5ஆம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயலில் இன்று நடைபெற்ற ஜும் ஆ தொழுகையின் பின்னர் பொதுமக்களுக்கு உரையாற்றுகையிலேயே மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.