8காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடியின் ஒரு பகுதி காத்தான்குடி நகர சபையால் ஆக்கிரமிக்கப்படுவதாக வெளியாகிய தகவலையடுத்து இன்று இரவு அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாகவும் பதற்றத்தை தடுக்க வந்த பொலிசாருக்கு பொது மக்கள் கல் எறிந்ததால் நிலைமை மோசமைந்ததையடுத்து மட்டக்களப்பில் இருந்து பொலிசாரும், இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு விரைந்து நிலமைகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிகின்றன.

தற்போது குறித்த இடத்தில் பொலிசாரும்,கலகத் தடுப்பு படையினரும்,போக்குவரத்து பொலிசாரும்,இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் பொது மக்களை பொலிசார், சிவில் உடை அணிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தாக்கியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அப்பகுதி சுமூக நிலைக்கு திரும்பியுள்ளதாக பின்னர் கிடைத்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த சம்பவத்தில் தகரங்கள் ,வேலிகள் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2

1

8

7

6

5

4

3